யோகவாசிஷ்டம் என்ற மஹாராமாயணம் 104
தினமொரு சுலோகம்
நாள் 104
தேவேந்திரனின் கவலை
ஸதி தர்மிணீ தர்மா ஹி ஸம்பவந்தீஹ நாஸதி
சரீரம் வித்தியதே யஸ்ய தஸ்ய தத்கில த்ரிப்தந்தி!
सति धर्मिणी धर्मा हि सम्भवन्तिह नासति
शरीरम् विद्ध्यते यस्य तस्य तत्किल त्रिप्तअति!
” இருப்பு (அஸ்தித்வம்)உள்ளவர்களுக்கும் மட்டும். தான்,அனுபவங்கள் உண்டாகும்.சரீரமே இல்லாத அசத்துக்கு எப்படி திருப்தியுண்டாகும்?”
தேவேந்திரன் கேட்டுக்கொண்டதிற்கிணங்க நாரதர் கார்கடியின் கதையை விவரமாகச் சொன்னார்:
“இந்த வெறுக்கத்தக்க ஜன்மம் அரக்கி கார்கடி உயிருள்ள ஊசியாக மாறியிருந்தாள்.பாபிகளின் உடலை ஊசி போல் குத் தி துளைத்து அவர்களது நாடி நரம்புகளையும், இரத்தத்தையும் மாசுள்ளதாக்கிக் கொண்டிருந்தாள். அவள் காற்றினால் மனிதர்களின உடல்களில் நுழைந்து தாங்கமுடியாத வேதனையை உள்வாங்கிக்கொண்ட கொண்டிருந்தாள். தூய்மையற்ற உடல்களில்த் தான் அவள் இவ்வாறு நுழைந்து வேதனை உளவாக்கி வந்தாள். கழுகு போன்ற ஈன ஜன்மங்களின உடல்களில்க் கூட நுழைந்து அவற்றின் மாமிசத்தை உண்டு மகிழ்நதாள். மிகுந்த தவ வலிமையின் காரணமாக அவளால் இரையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜீவிகளின் உடலிலும் உள்ளத்திலும் நுழைந்து அவர்களை தாக்கினாள். அவ்வாறு நுழைவது மூலம் அவர்களது செயல்களிலும் அவள் பங்காளியானாள். காற்றுப் போல் ஸூக்ஷமமான சரீரமுடையவளும் கண்ணுக்குத்் தென்படாதவளாகவும் இருக்கிறவளுக்கு என்ன தான் செய்ய இயலாது? ஆனால் அவளது மாசு படிந்து வாசனைகளின் காரணம் அவளுக்கு சிலரிடம் அதிக பிரியமும்,மற்று சிலரை பிடிக்காமலும் போனது.
காலப் போக்கில் அவளின் மனதிலும் மாற்றம் உண்டாயிற்று. அவளுக்கு தனது வாழ்வின் அர்தத்தமின்மை புரிய ஆரம்பித்தது.
அவள் ஒரு கழுகின் மேல் ஏறி இமயமலையின் உச்சியை அடைந்தாள். முதலில் கூறியது போல் கடும். தவம் அனுஷ்டித்தாள்.அந்த தவம் தொடர்கிறது. அல்லையோ , தேவ ராஜன்,அவள் தவத்தை முடக்கவில்லையென்றால் உலகம் அழிந்து விடும் தாங்கள் தான் ஏதாவது செய்ய வேண்டும்.” இவ்வாறு நாரதன் கேட்டுக்கொள்ளும் கொண்டார்.
வஸிஷ்டர் தொடர்நதார்;’இதைக் கேட்ட இந்திரன் கார்கடி தவம் செய்யும் இடத்தை துல்லியமாக கண்டுபிடிப்பதற்காக வாயு தேவனை அனுப்பினான். அங்கும் இங்கும் அலைந்து திரிந்து விட்டு கடைசியாக வாயு தேவன் இமய மலைக்கு வந்து சேர்ந்தான்